Monday, December 31, 2012

சனவரி 4 – அன்று தமிழகமெங்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் இழுத்துப் பூட்டும் போராட்டம்!


தமிழக இளைஞர் முன்னணி சார்பில், சனவரி 4 – அன்று
தமிழகமெங்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் இழுத்துப் பூட்டும் போராட்டம்!

இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம்வரும் சனவரி 4 2013 அன்று தமிழகமெங்கும் நடத்தப்படும் என, கடந்த 17.11.2012 அன்று குடந்தையில் நடைபெற்ற தமிழக இளைஞர் முன்னணியின் ஆறாவது தமிழக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பரப்புரைகள் தமிழகமெங்கும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  

இளைஞர்களை போதையில் ஆழ்த்தி, அவர்தம் ஆளுமையைச் சீரழித்து, உடலையும் நாசப்படுத்தும் மதுவை, அரசே விற்பனை செய்து வருகிறது.  உணவைப் போலவே, மக்களுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள கல்வி, மருத்துவம் ஆகியவற்றை தனியார் நிறுவன முதலாளிகள் கொள்ளை இலாபத்தில் விற்றுக் கொண்டிருக்க, அரசாங்கமோ மது விற்பனையில் இலக்குகள் நிர்ணயித்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த தீபாவளிப் பண்டிகையின் போதுதமிழக அரசின் மதுபான  விற்பனை நிறுவனமான டாஸ்மாக் மதுக்கடைகள்சற்றொப்ப 270 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்துள்ளதாக அறிவித்தது. தமிழகத்தின் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய மண்டலங்களில், இதுவரை சற்றொப்ப 12 விழுக்காடு மது விற்பனை அதிகரித்திருப்பதாகவும், திருச்சி பகுதியில் மட்டும் இந்த ஆண்டு 22 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் ஒவ்வொரு நாளும் 500 புதிய வாடிக்கையாளர்கள் வருவதாகப் பெருமையோடு தெரிவிக்கிறார் மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரியொருவர். அதாவது, தமிழகத்தில் இயங்கும் 6000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளின் மூலம், நாள்தோறும் 30 இலட்சம் புதிய குடிகாரர்களைத் தமிழக அரசு உருவாக்கி வருகிறது.

பள்ளி – கல்லூரி மாணவர்களும், படித்து வேலைக்குச் செல்லும் இளைஞர்களும், அலுவலகங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்க உழைப்பாளிகளும் மதுவை நாடிச் சென்று தம் ஆளுமையை சீரழித்துக் கொள்வது இன்று அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் கவலை கொள்ளும் சமூகப் போக்கும் அதிகரித்துவிட்டது.

தமிழகத்தின் பொதுப் பிரச்சினைகளில் சேர்ந்து செயல்பட மறுத்து எதிரெதிர்த் திசையில் செல்லும் அ.திமு.க., தி.மு.க. கட்சிகள் மதுக்கடைத் திட்டத்தில் மட்டும் ஒரே கருத்தில் செயல்படுகின்றன. இரண்டு கழக ஆட்சிகளிலும் டாஸ்மாக் விற்பனை திட்டமிட்டு வேகப்படுத்தப்பட்டது. அரசின் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவிற்பனை நடந்தாலும் மது உற்பத்தி ஆலைகள் மட்டும் தனியாரிடத்தில் தான் உள்ளன. மது உற்பத்தி ஆலைகள் அ.தி.மு.க., தி.மு.க., முக்கியப் புள்ளிகளால் நடத்தப்படுகின்றன.

சுயமாக சிந்திக்கும் ஆற்றல், சொந்தமாக உழைத்து உண்ணும் சுயமரியாதை கொண்ட மனநிலை, இவற்றை அடிப்படையாகக் கொண் ஆளுமையோடு இளைய சமுதாயத்தினர் உருவாவதை இந்தக் கட்சிகள் பொறுத்துக் கொள்வதே இல்லை. அதனால் தான்ஆள்கின்ற மற்றும் ஆண்ட கட்சிகளெல்லாம் மதுவின் சீரழிவுகளுக்குத் தொடர்ந்து துணை போகின்றன.

கடந்த பத்தாண்டுக்கு முன்னால், 2002-03 நிதியாண்டில் 2,828.09 கோடிக்கு மது விற்பனையில் வருவாய் ஈட்டிய டாஸ்மாக் நிறுவனம், 2011-12 நிதியாண்டில் சற்றொப்ப 18,081 கோடி ரூபாய் மதுவை விற்பனை செய்திருக்கிறதுஇந்த நிதியாண்டில் 25,000 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

இந்தத் தொகை, உழைக்கும் மக்களில் கணிசமானோர், தமக்குக் கிடைத்த கொஞ்ச நஞ்சக் கூலி வருவாயைக் கூட மது அருந்தி இழந்ததால் கிடைத்தத் தொகை. மதுவிற்கு அடிமையாகி நுரையீரல் அழுகி இறந்தவர்களின் குடும்பங்கள், வாழ வழியற்று நடுத்தெருவிற்கு வந்ததால் கிடைத்தத் தொகை.

பலத் தமிழ்க் குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்ததால் கிடைத்த தொகையால் தான், இந்த அரசாங்கமே செயல்படுகின்றது எனச் சொல்வதற்கு உண்மையில் இந்த அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டாமா? அதிகாரிகள் அவமானப்பட வேண்டாமா? அதுதான் இல்லை.

தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை 1,18,610 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாக தமிழக அரசு தனது 2012-13 வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில், 25,000 கோடிக்கும் மேலாக வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் கடைகளை மூடலாமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்பெரும் பற்றாக்குறைக்கு இடையிலும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதற்கு வேறு வழி என்ன இருக்கிறது என்றும் கேட்கிறார்கள்.

உண்மை நிலை என்னஇலவச அரிசித் திட்டங்களுக்கு செலவிடும் மொத்தத் தொகை, ஆண்டுக்கு வெறும் 10,974 கோடி ரூபாய் தான். இதனை கீழ்வரும் பட்டியல் மூலம் அறியலாம்.



அதாவது, 25 ஆயிரம் கோடி ரூபாயை மது விற்பனை மூலம் பெற்று, அதில் பாதிக்கும் குறைவாக 10,974 கோடி ரூபாயை, இலவசத் திட்டங்களுக்கு செலவிடுகிறது தமிழக அரசு. தமிழர் குடும்பங்களிடமிருந்து பிடுங்கிய தொகையில் சிறுபகுதியை அவர்களிடமே தருவது தான் இந்த இலவசத் திட்டங்கள். இந்தத் திட்டங்களுக்கு வேறு நிதி ஆதாரமே இல்லையா? இருக்கிறது.

தமிழகத்திலிருந்து இந்திய அரசு கடந்த ஆண்டு வசூலித்த வரித்தொகை மட்டும், 79,631 கோடி ரூபாய் ஆகும் அதன் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



தமிழகத்திலிருந்து இந்திய அரசு கொண்டு செல்லும் இப்பெருந்தொகையை தமிழக அரசு, இதுவரை ஒருமுறை கூட முழுவதுமாகக் கேட்கவில்லைஏன்? இத்தொகையில் பாதியைக் கூட பங்காகக் கேட்கவில்லை. தமிழகத்திற்கு உரிமையுள்ள வருமானமான இந்தப் பெருந்தொகையில், தமக்குரியப் பங்கைக் கேட்க வக்கில்லாத தமிழக அரசு, தில்லிக்குச் சென்று 1000 கோடிக்கும், 2000 கோடிக்கும் பிச்சை எடுப்பதை ஏதோ பெரிய சாதனையாக படங்காட்டுகின்றது. இதை நம்புபவர்கள், டாஸ்மாக் இல்லையெனில் அரசே நடக்காது என ஏமாறுகின்றனர்.

இந்திய அரசு தமிழகத்திலிருந்து கொள்ளையடித்துச் செல்லும் பணத்தை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழக அரசு, மதுக்கடைகளை மூட முன்வரவில்லையெனில், அப்பணியை விழிப்புணர்வுள்ள தமிழக இளையோரைத் திரட்டி நாம் மேற்கொள்வோம்.

அதன்படி, வரும் சனவரி 4 அன்று கீழக்கண்ட இடங்களில், டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடைபெறும்.

·         ஓசூர் தாலுக்கா அலுவலகம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்கிறார்.

·        சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணியளவில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையேற்கிறார்.

·      தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமார் தலைமையேற்கிறார்.

·  சிதம்பரம் மேலவீதி கஞ்சித்தொட்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையேற்கிறார்.
·         பெண்ணாடம் முருகன்குடி முதன்மைச் சாலையில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு தலைமையேற்கிறார். 

·   சுவாமிமலை ஆத்தங்கரைத் தெரு அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செந்தமிழன் தலைமையேற்கிறார்.

·         புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. அமைப்பாளர் தோழர் மணிகண்டன் தலைமையேற்கிறார்.

·         கிருட்டிணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி கடைவீதியில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் பெ.ஈசுவரன் தலைமையேற்கிறார்.

·     திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கடை வீதியில், த.இ.மு. சார்பில், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முன்னணித் தோழர் பாவலர் மு.வ.பரணர் தலைமையிலும், தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் தியாகராஜன் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டங்களில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக சக்திகளும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென தமிழக இளைஞர் முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது. 

தோழமையுடன்,
கோ.மாரிமுத்து (தலைவர், தமிழக இளைஞர் முன்னணி),
க.அருணபாரதி (பொதுச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி)


Friday, December 21, 2012

காவிரி உரிமைக்குப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து மறியல்! காவிரி டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கைது!


காவிரி உரிமைக்குப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து மறியல்!
காவிரி டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கைது!
தமிழக இளைஞர் முன்னணி பங்கேற்பு!

தமிழகத்தை வஞ்சிக்கும் நடுவண் அரசைக் கண்டித்து, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை, மாநிலங்களவை மற்றும் அமைச்சர்கள்) அனைவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நடுவண் அரசு நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பக் கூடாது என்றும், நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தமிழகக் கனிம வளங்களை நடுவண் அரசு எடுக்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும், கருகிப் போன சம்பாப் பயிருக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் ஆகிய தீர்மானங்களை வலியுருத்தியும், தமிழக அரசு காவிரி நீரைப் பெற்றுத் தர உரிய முயற்சிகள் எடுக்காததைக் கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களில், இன்று தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்தது. அதன்படி பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு, பல நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ளனர்.

தஞ்சை
தஞ்சை மாவட்டத் தலைநகரான தஞ்சாவூரில், காலை 10 மணியளவில், சாந்தப் பிள்ளை கேட் அருகிலுள்ள காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தை 1000க்கும் மேற்பட்ட உழவர்களும், உணர்வாளர்களும் முற்றுகையிட்டனர். காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் மறியலுக்குத் தலைமையேற்றார்.

.தி.மு.. துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட்த் தலைவர் மணிமொழியன், டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் வலிவலம் மு.சேரன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தெ.காசிநாதன், தமிழக மக்கள் சனநாயகம் கட்சித் தலைவர் புதுக்கோட்டை கே.என்.செரிப், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன், விடுதலைத் தமிழ் புலிகள் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், புதிய தமிழகம் மாவட்ட்த் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுகுமார், மனித நேய மக்கள் கட்சி எஸ்.எஸ்.நூறுதீன், பாரதிய சனதா கட்சி எஸ்.பி.சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் திரளாக கலந்துக் கொண்டனர்.

முன்னதாக காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தின் வாயிலில் நின்று,   காவல்துறையினரே கதவை பூட்டினர். அந்த நிலையில் ஒரு குழுவினர் காவல்துறையினரை தாண்டி அலுவலகத்திற்குல் சென்று அலுவலகப் பணியாளர்களை வெளியேற்றினர். அதன்போது மோதல் ஏற்பட்டு, தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் செங்கிப்பட்டி விசயகாந்த், குடந்தை செயலாளர் சரவணன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. அருகிலுள்ள மருத்துவமனையில் உடணடியாக அழைத்து செல்லப்பட்டு தோழர்களுக்க சிகிச்சையளிக்கப்பட்டது. தோழர் விசயகாந்துக்கு தையல் போடப்பட்டது.

காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகமும் அதல் சாலையும் முழுமையாக முற்றுகையிடப்பட்ட நிலையில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருகிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் பேசுகையில், நாம் அலுவலகத்திற்குள் செல்லாமல் மறித்து முற்றுகையிட வந்தோம். ஆனால் காவல்துறையோ அலுவலக வாயிலை பூட்டியுள்ளனர். இந்த வகையில் நமது போராட்டம் வெற்றிப் பெற்றது என அறிவித்த போது, கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். அடுத்த கட்டப் போராட்டத்தின் திட்டமிடல் கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 28.12.2012 அன்று தஞ்சையில் நடைபெரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சிதம்பரம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், காலை 10 மணியளவில் தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள, தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் தமிழக உழவர் முன்னணி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்று, சற்றொப்ப 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்திற்கு தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு.சி.ஆறுமுகம் தலைமையேற்றார். தமிழக உழவர் முன்னணி மாவட்டத் தலைவர் திரு. அ.கோ.சிவராமன்ஒருங்கிணைப்பாளர் திரு. ம.கோ.தேவராசன், மாவட்ட துணைச் செயலாளர் சரவணன்செயற்குழு உறுப்பினர் தங்க. கென்னடி, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு திரு. இரா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 120க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டு சிதம்பரம் நகரில் ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர்
திருவாரூரில் காலை 10.30 மணியளவில் உதவி செயற்பொறியாளர் அலுவளகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  போராட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் அமைப்பு நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன் தலைமையேற்றார், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு.  .கோவிந்தசாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருத்துறைபூண்டி ஒன்றிய செயலாளர் தோழர் இரா.தனபால், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தோழர் ப.சிவவடிவேல், . பாலசுப்பிரமணியன், து.ரமேசு உள்ளிட்ட திரளான்னோர் கலந்து கொண்டு கைதாகினர்.

திருச்சி
திருச்சியில் இன்று காலை 11.00 மணியளவில், மாவட்ட நீதிமன்றம் அருகிலுள்ள திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை  செயற்பொறியாளர் அலுவலகம்  முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு .தி.மு.. அரசியல் ஆலோசகர் குழு உறுப்பினர் புலவர் முருகேசன் தலைமையேற்றபார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், திருச்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன், த.தேபொ.க. தோழர்கள் பாவலர் மு..பரணர், ஆத்மநாதன், இனியன், முத்துக்குமார், ஓசூர் மு.வேலாயுதம், செந்தில், செல்வக்குமார், துவாக்குடிக் கிளை செயலாளர் இலட்சுமணன், ராசாங்கம், குன்றாண்டார்க் கோயில் ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் திருப்பதி, ஒன்றியச் செயலாளர் அரோக்கியசாமி, கிள்ளுக்கோட்டை தமிழக இளைஞர் முன்னணி கிளைத் தலைவர் பெருமாள், ஒன்றியத் தலைவர் லட்சுமணன், செயலாளர் மணிகண்டன், தமிழக கலை இலக்கியப் பேரவை மாவட்டச் செயலாளர் இராசரகுநாதன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.





(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : சம்பந்தம்)