Thursday, October 4, 2012

காவிரி மீட்க த.இ.மு. தொடர்வண்டி மறியல் - மாலைமலர் ஏடு செய்தி


தமிழக பொதுஉடைமை கட்சியின் இளைஞர் அமைப்பான தமிழக இளைஞர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. 


காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டும். தமிழகத்தில் காவிரி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. 


நாகூரிலிருந்து பெங்களூர் செல்லும் ரெயில் இன்று 7.42 மணிக்கு சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது தமிழக இளைஞர் முன்னணியினர் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் குபேரன் தலைமை தாங்கினார். 


ரெயில் மறியலையொட்டி சிதம்பரம் ரெயில் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 5 நிமிடம் அவர்கள் மறியல் செய்தனர். போலீசார் உடனே மறியலில் ஈடுபட்ட குபேரன், சுப்பிரமணிய சிவா, சுகன்ராஜ், மணிமாறன், கார்த்திகேயன், ராஜேந்திரன், கலைவாணன், விஜயராஜ், வினோத் ஆகிய 9 பேரை கைது செய்தனர். 


அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டதும் ரெயில் அங்கிருந்து புறப்பட்ட சென்றது.

(நன்றி: மாலை மலர் இணையம்
http://www.maalaimalar.com/2012/10/04094702/cavery-river-problem-bangalore.html)