Tuesday, March 19, 2013

தமிழகம் எங்கும் : அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும் பாடையில் கட்டி எரிக்கப்பட்டது



தமிழகம் எங்கும் : அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும் பாடையில் கட்டி எரிக்கப்பட்டது

 

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைத்தும், ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாப்பதாகவும் உள்ள வகையில், அமெரிக்கா முன்வைத்துள்ள ஐ.நா. தீர்மானத்தையும், இலங்கை அரசைப் பாராட்டி இந்திய அரசு ஜெனீவாவில் அளித்துள்ள அறிக்கையும், இன்று(19.03.2013) தமிழக இளைஞர் முன்னணி சார்பில், பாடையில் கொண்டு சென்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 
சென்னை

சென்னை நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி வாயிலிருந்து, தமிழக இளைஞா முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையில் துவங்கிய பேரணியில், அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் பாடையில் எடுத்துச் செல்லப்பட்டது. 
நுங்கம்பாக்கம் சுடுகாடு வரை சென்ற பேரணியின் முடிவில், சுடுகாடு வாயிலில் அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசுக் கொடியும், சிங்களப் பேரினவாத அரசின் கொடியும் எழுச்சி முழக்கங்களுக்கிடையே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 
நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி சென்னை நகரத் தலைவர் தோழர் வினோத், தாம்பரம் தலைவர் தோழர் இளங்குமரன், செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் அகத்தாய்வன் உள்ளிட்ட த.இ.மு. நிர்வாகிகளும், மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஹரிஹரன், கொண்டல்சாமி உள்ளிட்டவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். 
ஓசூர்
Hosur2

ஓசூரில், இன்று காலை பேருந்து நிலையம் முன்பு 10.30 மணியளவில், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில், மோசடியான அமெரிக்கத் தீர்மானமும், இந்திய அரசின் அறிக்கையும் பாடை கட்டி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. போராட்டத்தில், கிருட்டிணகிரி நகர அமைப்பாளர் தோழர் பெ.ஈசுவரன், தோழர் செம்பரிதி கண்டன முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்வில், திரளான உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சை


தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி – தமிழக இளைஞர் முன்னணி சார்பில், அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் செனீவா அறிக்கையைக் கண்டித்தும் இவ்விரு அறிக்கைகளும் பாடையில் கொண்டு செல்லப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்றார். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு, த.இ.மு செயலாளர் தோழர் தட்சிணாமூர்த்தி, புலவர் இரத்தினவேலவர், ம.தி.மு.க. ஒன்றீயச் செயலாளர் இரா.நந்தகுமார், விடுதலைத் தமிழ்ப் புலிகள் அமைப்புச்செயலாளர் தோழர் அருண்மாசிலாமாணி, புதியத் தமிழகம் ஒன்றியச் செயலாளர் இராசமோகன், நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் அர்புதராசு உள்ளிட்ட திரளான முன்னணியாளர்களும், பொது மக்களும் இதில் திரளாகப் பங்கேற்றனர்.

தமிழக இளைஞர் முன்னணித் துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன் தலைமையிலான தோழர்கள், இந்திய அரசின் அறிக்கை மற்றும் அமெரிக்கத் தீர்மானத்தை இராசபக்சே உருவபொம்மையுடன் கட்டி பாடையில் கொண்டு வந்து, எழுச்சி முழக்கங்களுக்கிடையேத் தீயிட்டுக் கொளுத்தினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேரணியை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.
சிதம்பரம்
Chid1

சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், இன்று காலை தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து, அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் மோசடி அறிக்கையையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும், திரளான இளைஞர்களும் பங்கேற்றனர். தமிழக இளைஞர் முன்னணி மூத்தத் தோழர் நா.வைகறை , ஐ.நா. மன்ற அமெரிக்கத் தீர்மானம் மற்றும் அதில் இந்திய அரசு முன்வைத்த அறிக்கை ஆகியவை ஈழத்தமிழர் இனப்படுகொலையை மூடி மறைக்கும் வஞ்சக செயல் என்பதை விளக்கிப் பேசினார்.
அப்போது இந்திய – சிங்கள அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுக்கு இடையே ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய -அமெரிக்க தீர்மானத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், சிதம்பரம் அரசுக் கலைக் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பெண்ணாடம்
பெண்ணாடம் பேருந்துநிலையம் அருகில் மாலை 5 மணியளவில் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு த.இ.மு.நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு தலைமையேற்றார்.
தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சித் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், ஆசிரியர் மாசிலாமணி, தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் இராமகிருட்டிணன், மனித நேயப் பேரவை பஞ்சநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அமெரிக்கத் தீர்மானம் தீயீட்டுக் கொளுத்தப் பட்டது, இதில் திரளான தமிழின உணர்வாளர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.

திருச்சி

திருச்சி திருவெறும்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழக இளைஞர் முன்னணி சார்பில் உண்ணாப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. உண்ணாப்போராட்டத்தை தமிழக இளைஞர் முன்னனி திருச்சி அமைப்பாளர் தோழர் த.தியாகராசன் தொடக்கி வைத்தார்.
தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சி பாவலர் முவ.பரணர், ம.தி.மு.க. அரசியல் ஆலோசகர் புலவர் முருகேசன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்.
தமிழ் கலை இலக்கியப் பேரவை செயலாளர் தோழர் இராசாரகுநாதன், தலைவர் இரெ.சு.மணி, மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் தோழர் பானுமதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் கவித்துவன், தோழர் இனியன், தூவாக்குடி த.தே.பொ.க. பொறுப்பாளர் தோழர் வி.க.லெட்சுமணன்,ம.தி.மு.க. திருச்சி மாவட்டச் செயலாளர் மலர்மன்னன், தேசிய முற்போக்குத் திராவிட கழகம் சட்டமன்ற உறுப்பினர் திரு செந்தில் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். திரளான தமிழின உணர்வாளர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும் பாடையில் கட்டி எரிக்கப்பட்டது



Chen2
தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைத்தும், ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாப்பதாகவும் உள்ள வகையில், அமெரிக்கா முன்வைத்துள்ள ஐ.நா. தீர்மானத்தையும், இலங்கை அரசைப் பாராட்டி இந்திய அரசு ஜெனீவாவில் அளித்துள்ள அறிக்கையும், இன்று(19.03.2013) தமிழக இளைஞர் முன்னணி சார்பில், பாடையில் கொண்டு சென்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
சென்னை
Chen1
சென்னை நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி வாயிலிருந்து, தமிழக இளைஞா முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையில் துவங்கிய பேரணியில், அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் பாடையில் எடுத்துச் செல்லப்பட்டது.
நுங்கம்பாக்கம் சுடுகாடு வரை சென்ற பேரணியின் முடிவில், சுடுகாடு வாயிலில் அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசுக் கொடியும், சிங்களப் பேரினவாத அரசின் கொடியும் எழுச்சி முழக்கங்களுக்கிடையே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
Chen3
நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி சென்னை நகரத் தலைவர் தோழர் வினோத், தாம்பரம் தலைவர் தோழர் இளங்குமரன், செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் அகத்தாய்வன் உள்ளிட்ட த.இ.மு. நிர்வாகிகளும், மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஹரிஹரன், கொண்டல்சாமி உள்ளிட்டவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
Chen4
ஓசூர்
Hosur1
ஓசூரில், இன்று காலை பேருந்து நிலையம் முன்பு 10.30 மணியளவில், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில், மோசடியான அமெரிக்கத் தீர்மானமும், இந்திய அரசின் அறிக்கையும் பாடை கட்டி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. போராட்டத்தில், கிருட்டிணகிரி நகர அமைப்பாளர் தோழர் பெ.ஈசுவரன், தோழர் செம்பரிதி கண்டன முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்வில், திரளான உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Hosur2

சிதம்பரம்

Chid1
சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், இன்று காலை தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து, அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் மோசடி அறிக்கையையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும், திரளான இளைஞர்களும் பங்கேற்றனர். தமிழக இளைஞர் முன்னணி மூத்தத் தோழர் நா.வைகறை , ஐ.நா. மன்ற அமெரிக்கத் தீர்மானம் மற்றும் அதில் இந்திய அரசு முன்வைத்த அறிக்கை ஆகியவை ஈழத்தமிழர் இனப்படுகொலையை மூடி மறைக்கும் வஞ்சக செயல் என்பதை விளக்கிப் பேசினார்.
Chid2
அப்போது இந்திய – சிங்கள அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுக்கு இடையே ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய -அமெரிக்க தீர்மானத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், சிதம்பரம் அரசுக் கலைக் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Wednesday, March 6, 2013

“ஆந்திர மதுக்கான் நிறுவனத்தை விரட்டியடிப்போம்” - புதுக்குடி ஆர்ப்பாட்டத்தில் சூளுரை!




திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்குடிவளம்பக்குடிதிருமலைசத்திரம் உள்ளிட்டகிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தராத ஆந்திர மதுக்கான் நிறுவனத்தைக் கண்டித்தும்அதற்கு துணை போகும் இந்திய அரசுதேசிய நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்தும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் நேற்று (05.03.2013) புதுக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பேசிய தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் .காமராசுபுதுக்குடி பேருந்துநிறுத்தத்தில் மதுக்கான் நிறுவனத்தால் மின் விளக்குகள் அமைக்கப்பட்டும் கூட அவை கடந்த ஓராண்டிற்கும் மேலாக எரியாத நிலையில்,இருட்டில் சாலையை கடந்து இதுவரை பத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதையும்பலர் உடல் அங்கங்களை இழந்தது குறித்தும்ஆதாரங்களுடன் பேசினார்.

தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் தோழர் .தேவதாசு பேசும் போதுஇங்கே போடப்பட்டுள்ள விளக்குகள் ஓராண்டாகஎரியவில்லையென்றால் எதற்காக மின்கம்பங்களை நட்டிருக்கீறீர்கள் எனக் கேட்டார்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சைமாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு பேசும் போதுமதுக்கான் நிறுவனத்திடம் கையூட்டுப் பெறுகின்ற காவல்துறை அதிகாரிகளுக்குகடுமையான எச்சரிக்கை விடுத்தார்

தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன் பேசும் போதுஇவ்வார்ப்பாட்டம் ஓர் எச்சரிக்கை தான் என்றும்,அடுத்துமதுக்கான் நிறுவன அலுவலகத்தை மக்களைத் திரட்டிச் சென்று முற்றுகையிடுவோம் என்றும் பலத்த கரவொலிக்கிடையேஅறிவித்தார்.
.தே.பொ.தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை பேசும் போதுஇந்திய அரசின் தமிழின விரோதச் செயல்களையும்,மதுக்கடைகளை வைத்து தமிழ்நாட்டு இளைஞர்களை சீரழிக்கும் தமிழக அரசையும்இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் ஏற்படுகின்றவிபத்துகள் பற்றியும் விரிவாகப் பேசினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதிமகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மீனா,மேலத்திருவிழாப்பட்டி ..முசெயலாளர் தோழர்  .கணேசன் ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்தினர்ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்துபேசிய தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் .அருணபாரதிஇந்திய அரசு நெடுஞ்சாலைகளை தனியாரிடம்விற்றுவிட்டதையும்அத்தனியார் நிறுவனங்கள் கிராம மக்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அடிப்படை வசதிகளைக் கூட செய்துத் தரமறுப்பதையும் எடுத்துரைத்தார்.

இவ்வார்ப்பாட்டத்தில்புதுக்குடிவளம்பக்குடிநரிகுறவன்பட்டிசெங்கிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.









(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Monday, March 4, 2013

மதுக்கான் நிறுவனத்தைக் கண்டித்து நாளை புதுக்குடியில் ஆர்ப்பாட்டம்



====================================================
அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல்
பேருந்து நிறுத்த நிழற்குடைகளை இடித்துத் தள்ளிய 
ஆந்திர மதுக்கான் நிறுவனம் – தேசிய நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்து
நாளை தஞ்சை மாவட்டம் புதுக்குடியில் ஆர்ப்பாட்டம்!
====================================================

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கிராமங்களில் மக்களின் வசதிக்காக அமைக்கபட்டிருந்த பேருந்து நிறுத்த நிழற்குடைகளையும், மின் கம்பங்களையும்  மதுக்கான் என்ற தனியார் நிறுவனம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு இடித்துத் தள்ளியது. இந்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மதுக்கான் என்ற தனியார் நிறுவனத்திடம் சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை ஒப்படைத்திருந்தது.

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி, காமராட்சிபுரம், நல்லெண்ணபுரம், கீழத்திருவிழாப்பட்டி, நரிக்குறவர் காலனி, மேலத்திருவிழாப்பட்டி, நவலூர், ராயமுண்டான்பட்டி, சொரக்குடிப்பட்டி, சோழகம்பட்டி, சமத்துவபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதுக்குடி பேருந்து நிறுத்தத்தையும், 

வளம்பக்குடி, காதாட்டிப்பட்டி, துருசுப்பட்டி, சிதம்பரப்பட்டி, நண்டம்பட்டி, விமம்பட்டி, கிள்ளுக்கோட்டை, மனையேறிப்பட்டி, ராயராம்பட்டி, வெண்டையம்பட்டி, கோட்டரப்பட்டி, புங்கனூர் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வளம்பக்குடி பேருந்து நிறுத்தத்தையும்,

திருமலைசமுத்திரம், எல்லைக்கால்தெரு, அய்யச்சாமிப்பட்டி, மருதக்குடி, மாதுரான்புதுக்கோட்டை, செல்லப்பன்பேட்டை, வைரபெருமாள்பட்டி உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருமலைசமுத்திரம் பேருந்து நிறுத்தத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். 

மேற்கண்ட மூன்று பேருந்து நிறுத்தங்கள் கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

ஓர் ஆண்டிற்குப் பிறகும் கூட, மதுக்கான் நிறுவனம் இடிக்கப்பட்ட பேருந்து நிழற்குடைகளை கட்டித் தரவில்லை. நிழற்குடை இல்லாததால் பேருந்துகளும் அந்நிறுத்தங்களில் நிற்பதில்லை. எச்சரிக்கை விளக்கு, நகர்புறங்களில் உள்ளதைப் போன்றுள்ள வெள்ளை நிற கோடுகள் உள்ளிட்ட வசதிகள் ஏதுமின்றி இருப்பதால், மக்கள் சாலையைக் கடக்க முற்படும் போது நிறைய விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.  

சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் முழுமையாக அமைக்கப்படாததாலும், புதுக்குடி உள்ளிட்ட பல இடங்களில் சாலையின் குறுக்கே கீழ்பாலங்கள் அமைக்கப்பட்டு அந்தப் பாலங்களில் தண்ணீரை வெளியேற்ற உரிய வடிகால் அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளில் செல்வதாலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதாலும் கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேற்கண்ட அடிப்படை வசதிகளை மதுக்கான் நிறுவனத்திடமும், தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்திடமும், பலமுறை நேரில் சென்று மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நகர்புறங்களில் மின்விளக்குகள், அதிர்வு கோடுகள், வடிகால் வசதிகள் பேருந்து நிறுத்தஙக்ள் என்று நகர்புறங்களை மேம்படுத்தும் நிர்வாகம், கிராமபுற மக்களின் உயிரையும், உரிமையையும் மலிவாக நினைக்கும் மதுக்கான் நிறுவனத்தையும், தேசிய நெடுஞ்சாலைத் துறையையும் கண்டித்து புதுக்குடியில், தமிழக இளைஞர் முன்னணி சாபில் 05.03.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. 

புதுக்குடி முதன்மைச்சாலையில், 05.03.2013 செவ்வாய் அன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் இவ்வார்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.காமராசு தலைமையேற்கிறார். 

தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன், ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு, த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் கா.காமராசு, தோழர் ம.கணேசன்(த.இ.மு., மேலத்திருவிழாப்பட்டி), தோழர் மு.அழகுமணி (த.இ.மு., புதுக்குடி), மகளிர் ஆயம் பொறுப்பாளர் தோழர் கெ.மீனா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

இவ்வார்ப்பாட்டத்தில், திரளான பொது மக்களும், உணர்வாளர்களும் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். 

========================
தமிழக இளைஞர் முன்னணி
பூதலூர் ஒன்றியம்
========================
தொடர்புக்கு 9943894826
========================