பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு வீரவணக்கம்!
தமிழ் இன, மொழி உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடிய பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது 18ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (11.06.2013), சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், தமிழக இளைஞர் முன்னணி சார்பில் தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் தலைமையிலான தோழர்கள் வீரவணக்கம் செலுத்தினர்!
பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவை நெஞ்சிலேந்துவோம்! தமிழ் இன, மொழி உரிமைகளுக்குப் போராட உறுதியேற்போம்!